Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.3,100 கோடிக்கு விலை போன லைகா: பின்னணி என்ன??

Webdunia
செவ்வாய், 3 மார்ச் 2020 (11:32 IST)
ஸ்பெயினின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான மாஸ்மோவில் லைகா தொலைத்தொடர்பு நிறுவனத்தை வாங்கியுள்ளது. 
 
லண்டனை தலைமையிடமாக கொண்டு சர்வதேச அளவில் 23 நாடுகளில் தொலைத்தொடர்பு சேவைகளில் முக்கிய பங்காற்றுகிறது Lyca Mobile Network. கடந்த 2010 ஆம் ஆண்டு ஸ்பெயினில் தனது வர்த்தகத்தை துவங்கிய லைகா, 1.5 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. 
 
இந்நிலையில் திடீரென 100% பங்குகளையும் லைகா, ஸ்பெயினின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான மாஸ்மோவிலிடம் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் லைகா ரூ.3,100 கோடியை பெற்றுள்ளது. இன்னும் சில வருடங்களுக்கு லைகா பெயரிலேயே தொலைத்தொடர்பு சேவை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏன் இந்த திடீர் முடிவு என கேட்கப்பட்டதற்கு லைகா குழுமத்தின் நிறுவன தலைவர் கலாநிதி அல்லி ராஜா சுபாஸ்கரன், நாங்கள் நினைத்ததை சாதித்து விட்டோம். இயன்ற வரை உயர்தரமான, குறைந்த கட்டணத்திலான தொலைத்தொடர்பு சேவையை கொடுத்து விட்டோம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments