Publish Date: Fri, 31 Jan 2020 (19:55 IST)
Updated Date: Fri, 31 Jan 2020 (20:03 IST)
நாட்டில் முதல்முறையாக அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல்.ஆகியவற்றில் இருந்து 92, 700 ஆகிய ஊழியர்கள் அதிகாரிகள் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர்.
பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நஷ்டத்தில் இயங்கி வந்ததாக தகவல் வெளியனது. அதனையடுத்து, நிறுவனத்தில், 50 மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் வி.ஆர்.எஸ் பெற விண்ணபிக்கலாம் எனவ அறிவித்தது. ஊழியர்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 78, 569 ஊழியர்களும், எம்.டி.என்.எல் நிறுவனத்தில் 14, 378 ஊழியர்களும் விரும்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளனர்.
இதனையடுத்து, இவர்கள் அனைவரும் ஓய்வு பெற்றனர். இதில், 75,217 ஊழியர்கள் மட்டுமே பணியில் தொடர்கின்றனர்.