சென்னையை வீழ்த்தியது பஞ்சாப்: பிளே ஆப் சுற்றுக்கு செல்லுமா?

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (19:16 IST)
இன்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையிலான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதனை அடுத்து புள்ளி பட்டியலில் அந்த அணி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது 
 
இதனை அடுத்து 135 என்ற இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 13 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் கே.எல்.ராகுல் 98 ரன்கள் அடித்தார்.
 
இந்த மாபெரும் வெற்றியால் பஞ்சாப் அணியின் புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறும் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணியின் போட்டியின் முடிவை பொறுத்தே பஞ்சாப் அணியின் பிளே ஆப் சுற்றுக்கு செல்லுமா என்பது தெரியவரும்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்த இந்தியா.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

2வது இன்னிங்ஸிலும் 153 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல்-அவுட்.. இந்தியாவுக்கு டார்கெட் எவ்வளவு?

முதல் டெஸ்ட்டில் இருந்து ஷுப்மன் கில் திடீர் விலகல்: கேப்டன் யார்?

ஜடேஜா விருப்பப்பட்டு தான் எங்கள் அணிக்கு வந்தார்: ராஜஸ்தான் அணி உரிமையாளர்..!

சஞ்சு வந்தாச்சு… அப்போ அடுத்த சீசன்தான் ‘one last time’-ஆ… ரசிகர்கள் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments