Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கிங்ஸ் அணியில் மற்றொரு வீரருக்கு கொரொனா !

Webdunia
புதன், 5 மே 2021 (18:12 IST)
ஐபிஎல்-2021 கிரிக்கெட் திருவிழா இந்த ஆண்டு சிறப்பாகத் தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்றுத் தங்கள் திறமையை நிரூபித்துக் கொண்டுள்ள நிலையில், சூப்பர் லீக் முடியும் முன்னமே சென்னை கிங்ஸ், ஹைதராபாத் அணி வீரர்களுக்குக் கொரொனா தொற்று உறுதியானது.

ஏற்கனவே இந்தியாவில், கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது. இதனால் ஐபிஎல் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று ஐபிஎல் தொடர் தள்ளிவைக்கப்படுவதாக பிசிசிஐ நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் பிசிசிஐக்கு ரூ.2000 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மற்றொரு சென்னை அணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி கொல்கத்தா அணியின் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரொனா பரிசோதனை செய்யப்பட்டது.

இன்று சென்னை கிங்ஸ் அணியின்  பந்துவீச்சாளர் பாலஜிக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல்   சென்னை அணியின்பயிற்சியாளர் மை ஹசிக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் மே 12ஆம் தேதி சிஎஸ்கே-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை எப்போது?

ஸ்பின்னர்களுக்கு எதிராக தோனி தடுமாறுகிறார்… காரணம் இதுதான் –முன்னாள் வீரரின் கருத்து!

“உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவது என் கையில் இல்லை”- நடராஜன் கருத்து!

கனத்த இதயத்துடன் சிஎஸ்கே அணியில் இருந்து விலகுகிறேன்: பத்திரனா அதிர்ச்சி அறிவிப்பு..!

உலகக் கோப்பையை வெல்ல பாகிஸ்தான் வீரர்களுக்கு சிறப்புப் பரிசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments