டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (19:13 IST)
ஐபிஎல் தொடரில் இன்று ஒரே நாளில் பெங்களூர் மற்றும் டெல்லி, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு போட்டிகளுடன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டி முடிவடைகிறது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையிலான போட்டியில் சற்றுமுன் டாஸ் வீசப்பட்ட நிலையில் பெங்களூர் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது. இதனை அடுத்து டெல்லி அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய இரண்டு அணிகளுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் இந்த போட்டியின் முடிவு பெரிய அளவில் பாதிக்காது. ஆனால் அதே நேரத்தில் பெங்களூரு மிகப்பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் சென்னை அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
முதல் இரண்டு இடங்களை பிடிப்பவர்களுக்கு பிளே ஆப் சுற்றில் மேலும் ஒரு போட்டி விளையாட வாய்ப்பு உள்ளது என்பது தெரிந்ததே. அந்த வாய்ப்பை சென்னை பெறுமா? அல்லது பெங்களூர் பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?

நடுவரை விரட்டி விரட்டி அடித்த வீரர்கள்.. கலவர பூமியான பாகிஸ்தான் மைதானம்..

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments