Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (19:13 IST)
ஐபிஎல் தொடரில் இன்று ஒரே நாளில் பெங்களூர் மற்றும் டெல்லி, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு போட்டிகளுடன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டி முடிவடைகிறது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையிலான போட்டியில் சற்றுமுன் டாஸ் வீசப்பட்ட நிலையில் பெங்களூர் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது. இதனை அடுத்து டெல்லி அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய இரண்டு அணிகளுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் இந்த போட்டியின் முடிவு பெரிய அளவில் பாதிக்காது. ஆனால் அதே நேரத்தில் பெங்களூரு மிகப்பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் சென்னை அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
முதல் இரண்டு இடங்களை பிடிப்பவர்களுக்கு பிளே ஆப் சுற்றில் மேலும் ஒரு போட்டி விளையாட வாய்ப்பு உள்ளது என்பது தெரிந்ததே. அந்த வாய்ப்பை சென்னை பெறுமா? அல்லது பெங்களூர் பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments