எனக்குக் கனவில் மிதப்பது போல இருந்தது – தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி பரவசம்!

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (17:07 IST)
தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான வருண் சக்கரவர்த்தி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருப்பது குறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. அதற்கான மூன்று அணிகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் அந்த தொடரில் நடக்க உள்ள டி 20 போட்டிகளில் தமிழக சுழல்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இப்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய அணியில் இடம் கிடைத்திருப்பது குறித்து பேசியுள்ள அவர் ‘நேற்று போட்டி முடிந்தபின் என்னிடம் வந்து சகவீரர்கள் உனக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. எனக்குக் கனவில் மிதப்பது போல இருந்தது. னக்கு இந்திய அணியில் இடமா, எனக்கு இந்திய அணியில் இடமா என்று கேட்டுக் கொண்டே இருந்தேன். என்னைத் தேர்வு செய்த தேர்வாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். எனக்கு வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவர் வரை சென்ற த்ரில் போட்டி.. 254 இலக்கை நெருங்கிய இங்கிலாந்து.. நூலிழையில் இந்தியா வெற்றி..!

இதுவரை ஜெயித்தது பெரிதில்லை.. இன்னும் 2 போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்: இந்திய அணியின் பயிற்சியாளர்

அரையிறுதி, இறுதி போட்டின்னாலே தெ.ஆப்பிரிக்காவுக்கு அலர்ஜி.. இன்னொரு தோல்வி..!

அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்துவது எங்களுக்கு ஸ்பெஷல்.. இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக்..!

தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் ஐபிஎல் போட்டி இல்லையா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments