Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறிஸ்கெய்ல் அதிரடியால் இன்னொரு வெற்றி: 4வது இடத்தை பிடித்தது பஞ்சாப்!

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (07:17 IST)
கிறிஸ்கெய்ல் அதிரடியால் இன்னொரு வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 46வது போட்டியான நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் கில் 57 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும் அதன் பின் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தது. கேப்டன் மோர்கன் 40 ரன்கள் எடுத்த போதிலும் ஸ்கோர் வெகுவாக உயரவில்லை
 
இந்த நிலையில் 150 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே மிக அபாரமாக விளையாடியது. குறிப்பாக கிறிஸ்கெய்ல் 29 பந்துகளில் 51 ரன்கள் அடித்தது அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தது. இறுதியில் 18.5 ஓவர்களில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டும் 150 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்றைய ஆட்ட நாயகனாக கிறிஸ்கெய்ல் தேர்வு செய்யப்பட்டார். நேற்றைய வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது என்பதும் அந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments