Publish Date: Tue, 03 Nov 2020 (23:10 IST)
Updated Date: Tue, 03 Nov 2020 (23:18 IST)
மும்பைக்கு எதிரான போட்டியில் விக்கெட் இழப்பின்றி 150 ரன்கள் என்ற இலக்கை எட்டி ப்ளே ஆப் சுற்றுக்கு நுழைந்தது ஐதராபாத் அணி.
நடைபெற்று வரும் 13 வது ஐபிஎல் லீக் தொடரில் இன்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக மோதிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து, 150 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இந்நிலையில் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் விளையாடியது.
இதில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது ஐதராபாத்.
மும்பைக்கு எதிரான போட்டியில் விக்கெட் இழப்பின்றி 150 ரன்கள் என்ற இலக்கை எட்டி ப்ளே ஆப் சுற்றுக்கு நுழைந்தது ஐதராபாத் அணி.