Publish Date: Mon, 19 Oct 2020 (21:18 IST)
Updated Date: Mon, 19 Oct 2020 (22:39 IST)
இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 37 வது போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.
இந்த போட்டியில் சற்று முன்னர் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டி என்பதால் இரண்டு அணிகளும் இந்த போட்டியில் வெற்றிபெற தீவிரமாக முயற்சிக்கும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்பட்ட நிலையில் சென்னை அணியினர் 5 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர் முடிவில் 125 ரன்கள் எடுத்து, ராஜஸ்தான் அணிக்கு 126 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.