Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல்-2020; சீறிய சென்னை கிங்ஸ்...20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..

ஐபிஎல்-2020;  சீறிய சென்னை கிங்ஸ்...20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..
, செவ்வாய், 13 அக்டோபர் 2020 (23:24 IST)
இன்று நடைபெறும் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

கடந்த 7 போட்டிகளில் சென்னை அணி தற்போது முதல் முறையாக முதலில் பேட்டிங் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியில் ஜெகதீசனுக்கு பதிலாக பியூஸ் சாவ்லா களமிறக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மாவுக்கு பதிலாக நதீம் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இரு அணிகளின் விளையாடும் பதினொருவர் குறித்த தகவல் பின்வருமாறு:

சென்னை அணி: வாட்சன், டீபிளஸ்சிஸ், அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, சாம் கர்ரன், பிராவோ, தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், கரன் சர்மா, பியூஷ் சாவ்லா

ஐதராபாத் அணி: டேவிட் வார்னர், பெயர்ஸ்டோ, மனிஷ் பாண்டே, வில்லியம்சன், ப்ரியம் கார்க், விஜய்சங்கர், ரஷீத் கான், நதீம், சந்தீப் சர்மா, கலீல் அகமது மற்றும் நடராஜன்
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியினர் நிதானமாக விளையாடி இன்று 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்து ஐதராபாத் அணிக்கு 168 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது.

இதையடுத்து ஆடிய ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

சென்னை அணி தொடர் தோல்விகளுக்குப் பிறகு இறு 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல்-2020 ; 168 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த சென்னை கிங்ஸ் !