Publish Date: Mon, 02 Nov 2020 (17:04 IST)
Updated Date: Mon, 02 Nov 2020 (17:25 IST)
சென்னை அணிக்கு ஒரு புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வருகிறார் ருத்துராஜ் கெய்க்வாட்.
சிஎஸ்கே அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டை அடுத்து அவர்களிடம் ஸ்பார்க் இல்லை என தோனி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்போது இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் அடுத்தடுத்து இரண்டு அரைசதங்களை அடித்து தன்னை நிருபித்துள்ளார். நேற்றைய போட்டியில் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி போட்டியிலும் அரைசதம் அடித்து கலக்கினார். அடுத்த ஆண்டு சென்னை அணிக்காக இவர் மிகப்பெரிய பங்களிப்பை அளிப்பார் என நம்பப்படுகிறது. இந்நிலையில் சென்னை அணியின் சக வீரரான டூ பிளசிஸ் ருத்ராஜ் கெய்க்வாட் இளம் விராட் கோலி போல இருக்கிறார். இக்கட்டான நேரங்களில் அவர் சிறப்பாக செயல்படுகிறார். இந்த மனப்பாண்மைதான் எல்லா இளம் கிரிக்கெட் வீரர்களிடம் இருக்க வேண்டும். எனக் கூறியுள்ளார்.