Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆளில்லா மைதானத்தில் தோனி ஓய்வு பெறுவதா? முன்னாள் வீரர் கருத்து!

ஆளில்லா மைதானத்தில் தோனி ஓய்வு பெறுவதா? முன்னாள் வீரர் கருத்து!
, திங்கள், 2 நவம்பர் 2020 (16:31 IST)
தோனி போன்ற வீரர்கள் ரசிகர்கள் முன்னால் ஒரு போட்டியிலாவது விளையாடி விட்டு அதன் பின்னர்தான் ஓய்வு பெறவேண்டும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் கடைசி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று நடந்தது. அப்போது இதுதான் சிஎஸ்கே அணிக்காக உங்கள் கடைசி போட்டியா எனக் கேட்டபோது தோனி ‘கண்டிப்பாக இல்லை’ எனக் கூறினார். இதனால் அவர் அடுத்த சீசனிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ‘அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரும் யுஏஇ-யில்தான் நடக்கும் போல் தெரிகிறது. அப்படி நடந்தால் 2022 ஐபிஎல் வரை தோனி ஆடியே ஆக வேண்டும். ஏனென்றால் தோனி போன்ற வீரர் ஆளில்லா மைதானத்தில் ஓய்வு பெறக் கூடாது. அவர் ரசிகர்கள் முன் ஒரு போட்டியாவது விளையாடி அதன் பின்னர்தான் ஓய்வு பெறவேண்டும் ‘ எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’டென்மார்க் தொடருடன் ஓய்வு ’’?- பேட்மிண்டன் வீராங்கனை பி.வி..வி சிந்து அறிவிப்பு