Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் சர்மா அபார பேட்டிங்: சென்னை அணிக்கு 156 இலக்கு!

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (21:47 IST)
சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 44வது லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் மும்பை பேட்டிங் செய்தது
 
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா நல்ல தொடக்கத்தை கொடுத்து 48 பந்துகளில் 67 ரன்கள் அடித்தார். இந்த ஐபிஎல் தொடரில் ரோஹித் அடித்த முதல் அரைசதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித்தை அடுத்து லீவீஸ் 32 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 23 ரன்களும் எடுத்ததால் மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 155 ரன்கள் எடுத்தது
 
சென்னை அணியின் சாண்ட்னர் இரண்டு விக்கெட்டுக்களையும் தீபக் சஹார், இம்ரான் தாஹிர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இன்னும் சில நிமிடங்களில் 156 என்ற இலக்கை நோக்கி சென்னை அணி பேட்டிங் செய்யவுள்ளது.

தல தோனி இன்று விளையாடவில்லை என்றாலும், வாட்சன், முரளி விஜய், ரெய்னா, ராயுடு, ஜாதவ், ஷோரே, பிராவோ, சாண்ட்னர், ஹர்பஜன் என நீண்ட பேட்டிங் வரிசையை சென்னை அணி பெற்றுள்ளதால் இந்த இலக்கை எளிதில் எட்டிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments