Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் போட்டி: மூன்றாவது வெற்றிக்காக களமிறங்கும் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணி

ஐபிஎல் போட்டி: மூன்றாவது வெற்றிக்காக களமிறங்கும் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணி
, புதன், 18 ஏப்ரல் 2018 (11:01 IST)
ஐபிஎல் தொடரின் 15-வது போட்டியில் கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் இன்று மோதுகின்றன.
 
ஜெயப்பூரில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியின் 15-வது ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், ரகானே  தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
 
கொல்கத்தா அணி இரண்டு வெற்றிகளையும், இரண்டு தோல்விகளையும் சந்தித்து நான்கு புள்ளி பெற்றுள்ளது. அதேபோல், ராஜஸ்தான் அணி இரண்டு வெற்றிகளையும், ஒரு தோல்விகளையும் சந்தித்து நான்கு புள்ளி பெற்றுள்ளது.
 
இந்நிலையில், இன்றைய போட்டியில் இரு அணியும் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்ய கடுமையாக போராடும் என நம்பப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் 2018" மும்பைக்கு கிடைத்த முதல் வெற்றி