Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜீரணக்கோளாறுகளை அகற்றிடும் இஞ்சி சாறு

அஜீரணக்கோளாறுகளை அகற்றிடும் இஞ்சி சாறு

Advertiesment
அஜீரணக்கோளாறு
இஞ்சிப் சாறு குடித்து வந்தால் நுரையீரல் சுத்தமாகும். சளியை ஒழித்து விடும். வாயுத் தொல்லை என்பதே வராது. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைத்துவிடும்.


 


* தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம். உடல் எடையை படிப்படியாக குறைத்துவிடும். ரத்தக் குழாய்களில் அடைப்பு என்றாலும் நீக்கி விடும். எனவே மாரடைப்பை தடுக்கும் சக்தியும் இஞ்சி சாறுக்கு உண்டு. பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய் கட்டிகளை நீக்கி விடும்.
 
* இஞ்சியை சாறு எடுத்து, அதில் தேன் கலந்து குடித்து வந்தால் செரிமான மண்டலத்தை சீராக செயல்பட முடியாமல், நிலைமை மிகவும் மோசமாக உள்ளதை சரிசெய்ய முடியும்.
 
* இஞ்சியை சாறாக்கி காலையில் குடிக்க வேண்டும். சாறு எடுத்தவுடனே பத்து நிமிஷம் அப்பிடியே வத்திருந்தால் அடியிலவண்டல் படியும். அதை அப்பிடியே விட்டுட்டு மேல தெளிஞ்ச நீரை மட்டும் எடுத்து குடிக்கணும். 
 
* காலையில் வெறும் வயித்துல குடிச்சா நல்லது. வெறுமனேயும் குடிக்கலாம், தேன் சேர்த்தும் குடிக்கலாம். டீ ப்போட்டும் குடிக்கலாம். இப்பிடி குடிக்கிறதுனால அஜீரணக்கோளாறு சரியாகும்.
 
* இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
 
* இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து, காலையில் ஒரு கரண்டி வீதம், ஒரு வாரம் குடித்துவர, நீரிழிவு குறையும்.
 
* இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர, தொடக்கத்தில் உள்ள ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும் அற்புத மருந்து தேன்