Publish Date: Tue, 20 Dec 2022 (21:39 IST)
Updated Date: Tue, 20 Dec 2022 (21:42 IST)
பொதுவாக சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமை என்றும் அனைத்து சிவாலயங்களிலும் திங்கட்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதும் தெரிந்ததே.
ஆனால் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மட்டும் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெறும். இங்கு செவ்வாய்க்கிழமை அருணாசலேஸ்வரரை வழிபட்டால் பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம் என புராணங்கள் கூறுகின்றன
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் என்பது அக்னி என்பதால், அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை என்பதால் இங்கே செவ்வாய்க்கிழமை தான் விசேஷ வழிபாடு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
எனவே திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை செவ்வாய்க்கிழமை வழிபட்டு பிறவிப் பிணியில் இருந்து மீண்டு கொள்ள ஆன்மீகவாதிகள் அறிவுரை தெரிவித்துள்ளனர்