Publish Date: Sat, 11 Oct 2025 (18:00 IST)
Updated Date: Sat, 11 Oct 2025 (16:52 IST)
ஆதிசேஷன் என பெயர் கொண்ட திருவந்திபுரம், ஆதிசேஷனால் உருவாக்கப்பட்ட தொன்மையான திருத்தலமாகும். இங்குள்ள மலை பிரம்மாசலம் என்றும், சஞ்சீவி மலையின் ஒரு பகுதி சேர்ந்திருப்பதால் அவுசதாசலம் என்றும் அழைக்கப்படுகிறது. அருகிலுள்ள கரும் நதி கருடனால் கொண்டு வரப்பட்டது.
இக்கோயிலின் மூலவர் தேவ நாதன் (தெய்வநாயகன்), தாயார் அம்புருகவாசினி (செங்கமலநாயகி) ஆவர். இவர்கள் மகாவரப்பிரசாதிகளாக விளங்குகின்றனர். பிரம்மா, சிவன் உள்ளிட்ட பல முனிவர்கள் இங்குத் தவம்புரிந்து வரம் பெற்றுள்ளனர்.
இது 108 வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. வைணவ ஆச்சாரியர் வேதாந்த தேசிகன் இங்குள்ள அவுசதாசல மலையில் 40 ஆண்டுகள் வசித்துத் தவமியற்றி, ஸ்ரீ ஹயக்ரீவர் தரிசனம் பெற்றார். உலகிலேயே ஹயக்ரீவருக்கு முதன்முதலில் இங்குதான் கோயில் எழுப்பப்பட்டது.
இங்குள்ள கருடாழ்வார் மற்ற கோயில்களை போல கைகூப்பிய நிலையில் இல்லாமல், தேவநாதசுவாமிக்கு மரியாதை செய்யும் விதமாக கை கட்டி நின்ற நிலையில் இருக்கிறார். சித்திரை மற்றும் புரட்டாசி மாதங்களில் பிரம்மோற்சவங்கள் விமரிசையாக நடைபெறுகின்றன.
இத்தலம் கடலூர் மாவட்டம், திருப்பா திரிப்புலியூர் இரயில் நிலையத்திலிருந்து 6 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.