Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர் அருகே நடைபெற்ற வீர குமாரர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி

Webdunia
ஞாயிறு, 15 ஏப்ரல் 2018 (09:01 IST)
கரூர் மாவட்டம் குளித்தளை நகராட்சிக்குட்பட்ட பெரியபாலம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஇராமலிங்க சௌடேஸ்வரியம்மன் கோவில் பராகத்தி திருவிழா கடந்த 11-ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முகூர்தகால் நடுவிழாவிற்கு கணபதி ஹோமம் காப்புகட்டுதல் மகாஅபிசேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் துவங்கியது.


 
திருவிழாவில் இரண்டாவது நாளான இன்று காவிரி ஆற்றில் இருந்து சக்தி அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீஇராமலிங்க சௌடேஸ்வரி அம்மனை அலங்கரிக்கபட்ட வாகனத்தில் அமரவைத்து  நகரின் முக்கிய வீதிகள் வழியாக  மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக  அழைத்து சென்று பின்னர் கோவிலை வந்தடைந்தது. அப்போது  அம்மனை வணங்கி விரதமிருந்து வந்த வீரகுமாரர்கள் இரு கைகளிலும் கத்திகளை ஏந்தியும் லாவகமாக கையாண்டு  ஆட்டமாடியவாறு தங்களது மார்பு மற்றும் கைகளில் வெட்டிகொண்டு தங்களது வழிபாட்டினை மேற்கொண்டனர்.  அப்போது 'தீஸ்கோ தள்ளி தீஸ்கோ' என்றும் கோஷங்களை எழுப்பியவாறு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்தாருடன் கலந்து கொண்டு அம்மனை வணங்கினர்.


ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு முன்கோபத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்!- இன்றைய ராசி பலன்கள் (02.05.2025)!

சங்கரன்கோவில், சங்கர நாராயணசாமி கோவிலில் சித்திரை திருவிழா.. குவிந்த பக்தர்கள்..!

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை திருவிழா! கோலாகலமாக நடந்த கொடியேற்றம்! - முழு விழா அட்டவணை!

மே மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மீனம்!

மே மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கும்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments