ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் காலபைரவருக்கு தேய்ப்பிறை அஷ்டமியை முன்னிட்டு விஷேச அபிஷேக ஆராதனை

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (23:09 IST)
கரூரில் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள காலபைரவருக்கு தேய்ப்பிறை அஷ்டமியை முன்னிட்டு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
 
கரூர் மாநகரின் மையப்பகுதியில் வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ செளந்தரநாயகி அருள்மிகு ஸ்ரீ அலங்காரவள்ளி  உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அருள்மிகு காலபைரவருக்கு விஷேச அபிஷேகங்கள் நடைபெற்றது.

பால், சந்தனம், இளநீர், கரும்புசாறு, பன்னீர், திருநீர் மற்றும் பஞ்சாமிர்தம் அபிஷேகங்களும் அதனை தொடர்ந்து காலபைரவருக்கு சிறப்பு வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, கும்ப ஆரத்தி, கோபுர ஆரத்திளும் பின்னர் மஹா தீபாராதனைகளும் சிறப்பாக நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ காலபைரவருக்கு அருள் பெற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபார வளர்ச்சி கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (07.11.2025)!

தம்மம்பட்டி சிவன் கோயிலில் 5000 பக்தர்கள் பங்கேற்ற பிரமாண்ட அன்னாபிஷேகம்!

ஆயிரம் கிலோ அரிசி சாதத்தால் பிரம்மாண்ட அன்னாபிஷேகம்: தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு பக்தர்கள் வழிபாடு

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து திருப்தி தரும்! - இன்றைய ராசி பலன்கள் (05.11.2025)!

திருநீறு சாம்பலில் உதித்தவர் கோரக்கர் சித்தர்! கோடி புண்ணியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments