Publish Date: Wed, 20 Sep 2023 (18:16 IST)
Updated Date: Wed, 20 Sep 2023 (18:17 IST)
கடலூர் மாவட்டம் சிங்கிரிகுடி என்ற பகுதியில் 16 திருகரங்களுடன் உள்ள நரசிம்மருக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நெய் தீபம் ஏற்றினால் ஏராளமான நன்மைகள் உண்டு என்ற ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
மனநிலை பாதிப்பு, கடன் தொல்லை, திருமண தடை, குழந்தை பாக்கியம், எதிரிகளால் தொந்தரவு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்து நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும்.
நெய் தீபம் ஏற்றி அதன் பின் துளசி அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்றும் தடை அனைத்தும் விலகும் என்றும் நம்பப்படுகிறது. மற்ற நரசிம்ம தலங்களை விட சிறப்பு வாய்ந்ததாக இந்த தலம் கருதப்படுகிறது.