Publish Date: Wed, 05 Apr 2023 (18:35 IST)
Updated Date: Wed, 05 Apr 2023 (18:36 IST)
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரம் தினத்தன்று ஆராட்டு விழா நடைபெறும் நிலையில் இன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
இதனை அடுத்து பக்தர்கள் திரளாக குவிந்தனர் பங்குனி உத்திரா திருவிழாவில் நிறைவாக பம்பையில் இன்று ஆராட்டு விழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஐயப்பனை அமர வைத்து மேளதாளத்துடன் கோவில் நிர்வாகிகள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்
இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் இன்று ஆராட்டு விழாவை அடுத்து கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.