Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குமாரவாடியில் உள்ள கோ ஆலயத்தில் மஹாலட்சுமி ஹோமம்

thanvandiri
, புதன், 12 ஏப்ரல் 2023 (21:59 IST)
செங்கல்பட்டு மாவட்டம் அருகேயுள்ள குமார வாடியில் உள்ள கோ ஆலயத்தில் வரும்  15 ஆம் தேதி காலையில், 8:30 மணிக்கு அனைத்து ஹோமங்களும் நடைபெறவுள்ளதாக கோவில் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் அருகேயுள்ள குமார வாடியில் உள்ளது கோ ஆலயம். இந்த ஆலயம் பிரசித்தி பெற்றதாகும்.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று, மக்கள்  நலமுற வாழவும், உடல் நலம்பெறவும், நிம்மதி பெற வேண்டி, மகாலட்சுமி ஹோமம் மற்றும் தன்வந்திரி ஹோமம் நடத்தப்படும்.

இந்த ஆண்டு விழா வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.  அப்போது, மகாலட்சுமி ஹோமம் , தன்வந்திரி ஹோமம், ஆகியவை நடைபெறவுள்ளது.

எனவே, 15 ஆம் தேதி காலையில், 8:30 மணிக்கு அனைத்து ஹோமங்களும் நடைபெறவுள்ளதாக கோவில் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுசீந்திரம் கோவிலில் சித்திரை விஷு கனி காணும் நிகழ்ச்சி: தேதி அறிவிப்பு..!