Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலையில் எத்தனை நாட்கள் மகாதீபம் காட்சி தரும்? தேவஸ்தானம் அறிவிப்பு..!

Mahendran
சனி, 14 டிசம்பர் 2024 (16:19 IST)
திருவண்ணாமலையில் நேற்று ஏற்றப்பட்ட மகா தீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு நேற்று மகா தீபம் ஏற்றப்பட்ட நிலையில் தினசரி மாலை 6 மணிக்கு இந்த தீபம் ஏற்றப்படும் என்றும், மறுநாள் காலை 6 மணிக்கு குளிர்விக்கப்படும் என்றும் இந்த மகா தீபத்தை வருகின்ற 23ஆம் தேதி வரை அதாவது 11 நாட்கள் பக்தர்கள் தரிசிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
11 நாட்கள் நிறைவேற்ற பின்னர் தீபக்கொப்பரை எடுத்துவரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து அதன் பின் அந்த தீப கொப்பரை பாதுகாப்பாக ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் தீபத் திருவிழாவின் தொடர் நிகழ்வாக இன்று இரவு ஸ்ரீ சந்திரசேகர் தெப்பல் உற்சவம் நடைபெறும் என்றும், நாளை இரவு ஸ்ரீ பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம், நாளை மறுநாள் இரவு ஸ்ரீ சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துளசியின் தெய்வீகப் பெருமையும், அதன் பலன்களும்!

நாளை வரலட்சுமி விரதம்.. கடைப்பிடிக்கும் முறை மற்றும் அதன் பலன்கள்

இந்த ராசிக்காரர்களுக்கு துணிச்சலான செயல்கள் பாரட்டுகளை தரும்! இன்றைய ராசி பலன்கள் (07.08.2025)!

ஆகஸ்ட் 8-ஆம் தேதி பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தகுந்த நேரம் எது?

இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்! இன்றைய ராசி பலன்கள் (06.08.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments