Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவல் தெய்வமாக உள்ள போன்ற கால பைரவர் வழிபாடு !!

Bhairavar
, திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (15:49 IST)
பயம் போக்கும் பைரவர் வழிபாடு துன்பம் ஒரு வெள்ளம் போல சூழ்ந்துகொண்டு தப்ப வழியின்றித் தவிப்பவர்கள், பற்றிக் கொள்ள உகந்த வழிபாடு பைரவர் வழிபாடு. பைரவர் காவல் தெய்வம் போன்றவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து காப்பவர். இவர், நவகிரகங்களில் சனியின் குருவாக கருதப்படுபவர். குருவை வணங்கினால் சீடன் மகிழ்வார் என்பது இயல்பு.

 

பைரவரை வழிபடுவதன் மூலம் சனியினைக் குளிர்வித்து அவர் பார்வையால் ஏற்படும் கெடுபலன்களை நற்பலன்களாக மாற்றிவிட முடியும். அசுர சக்திகளை அழிப்பதற்காகவே அவதரித்த பைரவரை வேண்டிக்கொள்ள பக்தர்களைத் தாக்கும் தீய சக்திகளை அவர் அழித்துக்காப்பார்.

சிவாலயங்களில் அனைத்து வழிபாடுக ளும் காலை சூரியபகவானிடம் தொடங்கி இரவில் பைரவரிடம்தான் நிறைவு பெறும். இரவில் கோயிலைக் காத்தருள்பவர் பைரவர் என்பதா ல் அவரின் திருவடிகளி ல் திறவுகோலை சமர்ப்பிக்கும் வழக்கமும் உண்டு. ஆலயத்தைக் காக்கும் பைரவர் அடியார்க ளின் வீட்டையும் காப்பார். தினமும் ஆலய ம் சென்று பைரவரை வணங்கி வர திருடர் பயம் நீங்கி ஆனந்தமாக வாழலாம்.

பைரவரை வழிபட  உகந்த நேரமும் நாளும்: இவரை, சிவப்பு நிற ஆடை அணிந்து சிவ ப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, சிவப்பு நிறப் பழ ங்களை நிவேதனம் செய்து வழிபடவேண்டும். கோயில்களில், ராகுகா லத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்துகொள்வது அபரிமி தமான நன்மை யைக் கொடுக்கும். இதனால், மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகமாகி வாழ்க்கை செழிப்படையும்.

வறுமை நீங்க. வெள்ளிக்கிழமை மாலை வேளையில், வில்வ இலைகள் மற்றும் வாச னை மலர்களால் பைரவரை அர்ச்ச னை செய்து வழிபட்டால் வறுமை அகலும். நோய்கள் தீர, யமபயம் நீங்க. ஞாயிற்று கிழமை ராகுகாலம், தேய்பிறை அஷ்டமி ஆகிய தினங்களில் பைரவருக்கு நடை பெறும் வழிபா டுகளில் கலந்துகொண்டு, பைரவரு க்கு மஞ்சள் மற்றும் சந்தன அபிஷேகம் செய்து எலுமிச் சைமாலை அணிவித்து அர்ச்சனை செய்தால் நோய்கள் மறையும். யம பயம் நீங்கும்.

சனி தோஷம் நீங்க. சனிக்கிழமைகளில் பைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டா ல், சனி கிரகத்தால் ஏற்படும் அனைத்து விதமான தோஷங்களும் விலகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏகாதசி தோன்றிய புராணம் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!