Publish Date: Mon, 02 Feb 2026 (15:53 IST)
Updated Date: Mon, 02 Feb 2026 (15:56 IST)
முருகனுக்கு உகந்த தைப்பூச திருவிழா நேற்று தமிழகமெங்கும் பக்தர்களால் கொண்டாடப்பட்டது.. தமிழகத்தில் எங்கெங்கெல்லாம் முருகன் கோவில் இருக்கிறதோ அங்கெல்லாம் தைப்பூசத் திருவிழா நடைபெற்றது.. குறிப்பாக பழனி, திருப்பரங்குன்றம், மருதமலை, வடசென்னிமலை,திருத்தணி போன்ற கோவில்களில் தைப்பூச திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது..
நேற்று மாலை 3:30 மணி அளவில் தேரோட்டம் துவங்கியது.. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கந்தனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பிய படி வடத்தை பிடித்து தேர் இழுத்தார்கள்.. அதேபோல் பக்தர்கள் பலரும் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, இளநீர் காவடி போன்ற காவடிகளை எடுத்து நடனமாடி வந்தார்கள்.
கோவிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளில் திருத்தேர் வலம் வந்தது.. நாமக்கல்லுக்கு அருகே உள்ள ராசிபுரம் திருச்செங்கோடு சேலம் போன்ற பகுதிகளிலிருந்து பெரும்பாலான மக்கள் இந்த கோவிலுக்கு வந்தார்கள்.. பலரும் அன்னதானம் வழங்கினார்கள்..