Publish Date: Thu, 09 Mar 2023 (23:50 IST)
Updated Date: Fri, 10 Mar 2023 (00:07 IST)
இந்து மதத்தில் உள்ள சில முக்கிய ஆன்மிகத் தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளது.
ஒருவருக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் வாசற்படியில் நின்று கொடுப்பதும், வாங்குவதும் இருக்ககூடாது. வாசல் படிக்கு உள்ளே இருந்துகொண்டு பணம் கொடுத்து வாங்குதல் வேண்டும்.
செவ்வாயில் பொருள் வாங்குவது நல்லது என்று பெரியோர் சொல்வார்கள். இதனால், பணம் கொடுத்தவருக்குத் திரும்பக் கிடைக்கும்.
வீட்டிலுள்ள வாசற்படிக்கட்டு, உரல், ஆட்டுக்கல், அம்மி ஆகியவற்றில் அமரக்கூடாது.
இரவில், பால், தண்ணீர், மோர், ஆகியவற்றை அடுத்தவர்கள் வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்ககூடாது.
வெற்றிலை, வாழையிலை ஆகிவற்றை வாடவிடக்கூடாது. அதேபோல், வெற்றிலையை தரையில் வைக்க்கூடாது.
அதேபோல், எரியும் குத்துவிளங்கை தானாக அணையவிடுதல்கூடாது. ஊதியு அணைக்கூடாது, இதை பூக்களால்தான் அணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.