Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா: இன்று தேரோட்டம்.. பக்தர்கள் மகிழ்ச்சி..!

Advertiesment
தஞ்சை பெரிய கோவில்

Mahendran

, புதன், 7 மே 2025 (18:51 IST)
பாரம்பரிய சிறப்புடன் விளங்கும் தஞ்சைப் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. உலக புகழ் பெற்ற இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருவதால், விழாவுக்கு முன்பே நகரம் விழா முகத்தில் மாறியது.
 
இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  பக்தர்கள் பக்தியுடன் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
 
இன்று அதிகாலை 5 மணிக்கு, தியாகராஜர், கமலாம்பாள், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர் போன்ற பஞ்சமூர்த்திகள் முத்துமணி அலங்காரத்தில் தேர்நிலைக்கு எழுந்தருளினர்.
 
மேலும் விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள் சப்பரங்கள் முன்னணியில் சென்று, பின்னர் தியாகராஜர், கமலாம்பாள் எழுந்தருளிய தேரை பல்லாயிரம் பேர் ஆரூரா என கோஷமிட்டு இழுத்தனர்.
 
மொத்தம் 14 இடங்களில் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாதுகாப்பு மற்றும் மருத்துவ அம்சங்கள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு எதிலும் நன்மை உண்டாகும்!- இன்றைய ராசி பலன்கள் (07.05.2025)!