Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொங்கல் வைக்கும் நேரம் எப்போது?

பொங்கல் வைக்கும் நேரம் எப்போது?
, வியாழன், 13 ஜனவரி 2022 (12:11 IST)
இந்த ஆண்டு தை ஆம் தேதி வெள்ளிக்கிழமை சந்திர ஓரையில் மீன லக்னத்தில் பொங்கல் வைக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 

 
பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு அறுவடைப் பண்டிகை ஆகும். பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது.
 
தைத்திருநாள் வழக்கமாக 1 ஆம் தேதி அன்று அதிகாலையிலோ அல்லது நள்ளிரவிலோ பிறந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு தை மாதம் வெள்ளிக்கிழமை அன்று மாலையில் தான் அதாவது 5.20 மணிக்கு பிறக்கிறது.
 
இருப்பினும் இந்த ஆண்டு தை ஆம் தேதி வெள்ளிக்கிழமை சந்திர ஓரையில் மீன லக்னத்தில் காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் பொங்கல் வைக்கலாம். பிற்பகல் 02.30 மணி முதல் 3 மணி வரை பொங்கல் வைத்து வழிபடலாம். மாலை 05.00 - 06.00 வரையும் பொங்கல் வைக்க நல்ல நேரம் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்திகை விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள் !!