Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 19-ந் தேதி முதல் 4 நாட்கள் அனுமதி!

sathuragiri
, வெள்ளி, 17 மார்ச் 2023 (19:57 IST)
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரிக்கு மார்ச் 19ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
 
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. 
 
அந்த வகையில் வரும் 21ஆம் தேதி அமாவாசை வருவதை அடுத்து 19ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு சதுரகிரிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலை ஏறலாம் என்றும் ஆனால் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியோர்களுக்கு மலையேற அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் திருப்பதி தேவஸ்தானம் கட்டிய கோவில்.. குடமுழுக்கு விழாவில் குவிந்த பக்தர்கள்..!