Publish Date: Fri, 25 Aug 2023 (18:49 IST)
Updated Date: Fri, 25 Aug 2023 (18:51 IST)
தந்தை மகன் உறவு சுமூகமாக இல்லை என்றால் ஆறுபடை வீடுகளில் நான்காவது வீடான சுவாமிமலை சென்றால் உறவு மேம்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
இந்த கோவிலில் சிவனும் முருகனும் இருக்கும் ஒரே தலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்.
இந்த கோவில் சிவனும் முருகனும் ஒருவரே என்பதற்கான ஆதாரமாக திகழ்கிறது. இந்த கோவிலுக்கு தந்தையும் மகனும் ஒருசேர சென்று வணங்கினால் தந்தை மகன் இடையே இருக்கும் உறவு மேம்படும் என்றும் கூறப்படுகிறது.
எனவே தந்தை மகன் உறவில் விரிசல் கண்டவர்கள் உடனடியாக சுவாமிமலை முருகனை சேர்ந்து தரிசித்து இருவரும் ஒற்றுமையாக வாழலாம் என்று கூறப்படுகிறது