Publish Date: Tue, 03 Oct 2023 (18:17 IST)
Updated Date: Tue, 03 Oct 2023 (18:18 IST)
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான விநாயகர் கோவில் உள்ள நிலையில் பல விநாயகர் கோவிலில் பலவிதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் வேலூர் அருகில் உள்ள சேண்பாக்கம் என்ற விநாயகர் கோவிலில் பாலாபிஷேகம் செய்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் செஞ்சேரிமலை என்ற பகுதியில் உள்ள விநாயகருக்கு சந்தன அபிஷேகம் செய்தால் குடும்பம் செழிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள திருநீற்று விநாயகருக்கு விபூதி அபிஷேகம் செய்தால் நினைத்த காரியம் பணிக்கும் என்று கூறப்படுகிறது.
இதேபோல் ஒவ்வொரு ஆலயத்திலும் உள்ள விநாயகருக்கு ஒவ்வொரு விதமான அபிஷேகம் செய்தால் ஒவ்வொரு விதமான பலன் கிடைக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாக உள்ளது.