புரட்டாசி மாதத்தில் அசைவம் தான் சாப்பிடக்கூடாது, தயிரும் சாப்பிடக்கூடாதா?

Mahendran
செவ்வாய், 16 செப்டம்பர் 2025 (17:56 IST)
ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் இருந்து பதினோராம் நாள், ஏகாதசி திதி வருகிறது. ஆண்டுக்கு இருபத்தி நான்கு முதல் இருபத்தைந்து ஏகாதசிகள் வருகின்றன. இந்த அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் அனுஷ்டிப்பவர்கள் பிறவி பிணியில் இருந்து விடுபட்டு வைகுண்டப் பதவியை அடைவர் என்பது ஐதீகம்.
 
புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி "பத்மநாபா ஏகாதசி" என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் மேற்கொள்வதன் மூலம், இந்திரன் மற்றும் வருண பகவானின் அருளைப் பெறலாம். இதனால், நீர் பற்றாக்குறை நீங்கி, நம் வீட்டில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர் வற்றாமல் பெருகும் என்பது நம்பிக்கை.
 
புரட்டாசி மாதத்தின் தேய்பிறை ஏகாதசி "அஜா ஏகாதசி" என்று போற்றப்படுகிறது. இந்த ஏகாதசியின் மகிமையை உணர்த்தும் வகையில், புராணங்களில் ஒரு கதை உண்டு: சத்தியத்துக்குப் பெயர்பெற்ற அரசனான அரிச்சந்திரன், தான் இழந்த நாடு, மனைவி, மக்களை மீண்டும் பெறுவதற்காக இந்த விரதத்தை கடைப்பிடித்து, அதில் வெற்றியடைந்து பல ஆண்டுகள் ஆட்சி செய்தார். எனவே, நாமும் இந்த நாளில் விரதம் இருந்தால், குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிலைக்கும்.
 
புரட்டாசி மாத ஏகாதசி விரதத்தின்போது, தயிர் சேர்த்துக்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்த ஒரு விஷயத்தில் கவனம் எடுத்துக்கொண்டால், விரதத்தின் முழு பலனும் கிடைக்கும்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பம் ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2026: துணிச்சலால் சாதிக்கப்போகும் ஆண்டு!

மகரம் ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2026: தடைகளை உடைத்து தன்னம்பிக்கையால் உயரப்போகும் ஆண்டு!

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பாத தரிசன விழா.. 2 கிமீ வரிசையில் நின்று தரிசித்த பக்தர்கள்..!

தனுசு ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2026: எதிர்ப்புகள் விலகி வெற்றி தேடி வரும் ஆண்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments