Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வலம்புரி சங்கை வீட்டில் வைத்து பூஜை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !!

வலம்புரி சங்கை வீட்டில் வைத்து பூஜை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !!
, செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (17:00 IST)
வலம்புரி சங்கு வீட்டில் வைத்து வழிபடும் போது நேர்மறையான ஆற்றல்கள் அதிகம் கிடைக்கின்றனர். மேலும் சித்ரா பௌர்ணமி அஷ்டமி ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வலம்புரி சங்கை பூஜை செய்யும் போது பலவிதமான நல்ல ஆற்றலை கொடுக்கிறது.


சங்கை வைத்து அபிஷேகம் செய்தால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். வலம்புரி சங்கில் அன்றாடம் சிறிது துளசி மற்றும் அதில் தண்ணீர் கலந்து சிறிது நேரம் வைத்து அதை பருகினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

பிறந்த குழந்தைகளுக்கு சங்கின் மூலம் பால் கொடுத்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். மேலும் இது ஆன்மீக ரீதியாக குழந்தைகளுக்கு திருஷ்டி படாமல் பாதுகாத்துக்கொள்ளும்.

ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் 14 செவ்வாய்க் கிழமைகளில் கோயில் சென்று வலம்புரி சங்கு மூலம் அம்மனுக்கு அபிஷேகம் செய்தால் நற்பலன்களை கிடைக்கும்.

ஒரு வீட்டில் வலம்புரி சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால், அந்த வீட்டில் குபேரன் அருள் இருக்கும். வீட்டில், பில்லி, சூனியம், ஏவல்கள் நெருங்காது. ஒரு வீட்டில் வலம்புரி சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால், அந்த வீட்டில் குபேரன் அருள் இருக்கும். மேலும் மகாலட்சுமி அந்த வீட்டில் நிரந்தர வாசம் செய்வாள்.

வலம்புரிச் சங்கில் தீர்த்தம் இட்டு, துளசி இலையைப் போட்டு பூஜித்து பின்னர், அந்த நீரை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

வலம்புரி சங்கில் வைத்த தீர்த்தத்தைக் கொண்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். சங்கை வீட்டில் வைத்தால் நன்மை மேலும் அதை  முறையான பூஜை செய்து வழிபாடு செய்வதன் மூலம் அதிகமான அதிர்ஷ்ட பலன்களை பெற முடியும்.

மந்திரம்:

"பாஞ்ச ஜன்யாயக வித்மஹே
சங்க ராஜாய தீமஹி
தந்தோ சங்க ப்ரசோதயாத்".

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துளசி மாலையின் சிறப்புகளும் பலன்களும் !!