Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

350 ஆண்டுகள் பழமையான வன்னி மரம்.. துயரங்களை போக்கும் என நம்பிக்கை..!

Advertiesment
350 ஆண்டுகள் பழமையான வன்னி மரம்.. துயரங்களை போக்கும் என நம்பிக்கை..!

Mahendran

, வெள்ளி, 3 ஜனவரி 2025 (18:18 IST)
ஸ்ரீகாளதீஸ்வரர் கோயிலில் 350 ஆண்டுகள் பழமையான வன்னி மரம் உள்ளது. இந்த வன்னி மரம் துயரங்களை போக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் அதை வணங்கி வருகின்றனர்.
 
சுமார் 350 ஆண்டுகள் பழமையான இந்த புனித மரம் இன்றும் கோவிலின் கோபுரம் போல் உயர்ந்து நிற்பதாக கூறப்படுகிறது. இந்த மரம் எந்தவித இடையூறும் இல்லாமல் மேல்நோக்கி வளர்ந்து வர வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
விநாயகர், முருகன்,  சிவன், சனீஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு வன்னி இலைகளால் பூஜை செய்யப்படுகிறது.
 
மருத்துவ குணமிக்க இந்த வன்னி இலைகளை மூலிகையாகவும் பயன்படுத்துகின்றனர். இந்த வன்னி மரத்தை வணங்குவதன் மூலம் தீவினைகள் அகலும், பாவங்கள் விலகும், மற்றும் துயரங்கள் மறையும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் நிலவுகிறது.
 
இந்த வன்னி மரத்தை வாழ்க்கையில் ஒரு தடவையாவது சுற்றி வந்து வணங்கினால், அனைத்து துயரங்களும் விலகி நன்மைகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து, லாபம் கூடும்! – இன்றைய ராசி பலன்கள்(03.01.2025)!