Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகாபெரியவர் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி முக்தி தினம்: சிறப்பு ஆராதனைக்கு ஏற்பாடு

Advertiesment
மகாபெரியவர் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி முக்தி தினம்: சிறப்பு ஆராதனைக்கு ஏற்பாடு

Mahendran

, வியாழன், 26 டிசம்பர் 2024 (18:09 IST)
காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதியாக விளங்கிய மகாபெரியவா என அழைக்கப்படும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகாசுவாமிகளின் 31-வது முக்தி தினம் நாளை கொண்டாடப்படுகிறது.
 
இவ்விழாவை முன்னிட்டு ஆராதனை மகோற்சவம் நேற்று தொடங்கியது. தொடக்க நாளில் சதுர்வேத பாராயணம் சிறப்பாக நடைபெற்றது. ரிக் வேதத்தின் முதுநிலை பாடநிகழ்ச்சியும் அதே அதிஷ்டானத்தில் தொடர்ந்து 40 நாட்களாக பாஸ்கர கன பாடிகள் ஆற்றிய வேத பாராயணமும் இடம்பெற்றது.
 
அதிஷ்டானத்தில் மகாபெரியவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்களுக்காக அன்னதானம் வழங்கப்பட்டது.
 
நாளை நிகழ்ச்சிகள் அதிக சிறப்பாக நடைபெற உள்ளன. இதில், ஸ்ரீ ருத்ர பாராயணம், பூஜை, ஹோமங்கள் போன்றவை இடம்பெறும். மகாபூர்ணாஹுதி தீபாராதனைக்கு பின்னர், மகாபெரியவரின் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்படும்.
 
பின்னர், கலை நிகழ்ச்சிகளாக கணபதி சேது லாரா குழுவின் புல்லாங்குழல் இசை, மாலை நேரத்தில் மாண்டலின் வித்வான் யு. ராஜேஷ் குழுவின் இனிய இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
    
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை! - 50 இடங்களில் நேரலைக்கு ஏற்பாடு!