Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்செந்தூர் கோயிலில் தரிசனத்திற்கு ரூ.11,000 கேட்கப்பட்டதா? பக்தர்கள் பகீர் புகார்..!

Siva
திங்கள், 11 ஆகஸ்ட் 2025 (18:14 IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கேரள பக்தர்களிடம் தரிசனத்திற்காக 11,000 ரூபாய் கேட்கப்பட்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கேரளாவிலிருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற பக்தர்களில் ஒருவரிடம், தரிசனம் செய்வதற்கு 11,000 ரூபாய் கேட்டதாகவும், 4 பக்தர்களிடம் 44,000 ரூபாய் பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள், கோவில் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
 
இந்த சம்பவம் குறித்து கோவில் நிர்வாகத்தைத் தொடர்புகொண்டபோது, "இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பக்தி உணர்வுடன் வரும் பக்தர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதும், பகல் கொள்ளை நடத்துவதும் மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாலட்சுமியின் அருள் பெற 12 வழிகள் என்னென்ன தெரியுமா?

இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது! இன்றைய ராசி பலன்கள் (08.08.2025)!

துளசியின் தெய்வீகப் பெருமையும், அதன் பலன்களும்!

நாளை வரலட்சுமி விரதம்.. கடைப்பிடிக்கும் முறை மற்றும் அதன் பலன்கள்

இந்த ராசிக்காரர்களுக்கு துணிச்சலான செயல்கள் பாரட்டுகளை தரும்! இன்றைய ராசி பலன்கள் (07.08.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments