Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முகத்தின் பொலிவை இயற்கை வழியில் அதிகரிக்க சில டிப்ஸ் !!

Advertiesment
முக பொலிவு
முக்கியமாக மஞ்சள் தூள் முகப் பொலிவை அதிகரிப்பதோடு, பருக்கள், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போன்ற பல சரும பிரச்சனைகளையும் போக்கும்.


மஞ்சளைக் கொண்டு ஒருவர் அடிக்கடி வீட்டிலேயே ஃபேஸ் பேக் போட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல்,  அழற்சி எதிர்ப்பு போன்ற மருத்துவ பண்புகளால் சருமத்தின் அழகு மேம்படும்.
 
* ஒரு பௌலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள  வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊறவைக்க வேண்டும். பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இறுதியில் நேச்சுரல்  ஸ்கின் டோனரான ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தைத் துடையுங்கள்.
 
* ஒரு சிறிய பௌலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள், 2-3 துளிகள் லாவெண்டர் ஆயில் மற்றும் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த ஃபேஸ்  பேக் கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு காய வைக்கவேண்டும். இறுதியில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள்.
 
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தேனில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு காய வைக்க  வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 3-4 முறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆமணக்கு எண்ணெய்யின் அற்புத பயன்கள் !!