Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மழைக்காலங்களில் சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கான சில அழகு குறிப்புக்கள் !!

மழைக்காலங்களில் சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கான சில அழகு குறிப்புக்கள் !!
மழைக்காலங்களில் சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி செய்யக்கூடிய எளிமையான  அழகு குறிப்புக்களை பார்ப்போம்.

முகம் பொலிவு பெறுவதற்கு, சந்தனத் தூள்1 தேக்கரண்டி, ரோஜா, பன்னீர் 2 தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி போன்றவற்றை எடுத்துக்கொண்டு நன்றாகக் கலக்கவும். இதை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவவும்.
 
ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கு, ஓட்ஸ் 2 தேக்கரண்டி, ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, தேன் 1 தேக்கரண்டி, தயிர் 2 தேக்கரண்டி இவை அனைத்தையும் நன்றாகக் கலந்து 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்பு முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
 
மிருதுவான சருமத்திற்கு, ஸ்ட்ராபெர்ரி பழம் 2 (அரைத்தது), முல்தானிமெட்டி 2 தேக்கரண்டி, ரோஜா பன்னீர் 3 தேக்கரண்டி எடுத்துக்கொண்டு மூன்றையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமாவாசை மற்றும் விரத நாட்களில் பூண்டு வெங்காயத்தை தவிர்ப்பது ஏன்...?