Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சருமத்திற்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத இயற்கை அழகு குறிப்புகள்

சருமத்திற்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத இயற்கை அழகு குறிப்புகள்
சருமத்திற்கு பயன்படுத்தும் கீரிம்களில் ஆபத்துக்கள் உள்ளதால், இயற்கையான பொருட்களை பயன்படுத்தி முகத்தை எவ்வாறு பொலிவுடன் வைத்திருப்பது என்பதை பார்ப்போம். இவை எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.
கருவளையம் நீங்க ஆரஞ்சு பழத்தின் சக்கையை கண்கள் மீது அரைமணி நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால்  கருவளையம் காணாமல் போகும்.
 
சோர்வான கண்கள் பிரகாசமாக இருக்க இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவ வேண்டும்.  இவ்வாறு செய்வதால் சோர்வு நீங்கி கண் பிரகாசமாக இருக்கும்.
 
தலைமுடி நன்கு வளர வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
சருமம் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்க கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்து வந்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
 
முகத்தில் உள்ள முடிகளை அகற்ற முட்டையின் வெள்ளைக்கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வந்துவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அன்றாட உணவில் எள் சேர்ப்பதால் என்ன பயன் தெரியுமா...?