Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தயிரை பயன்படுத்தி சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்வது எப்படி...?

தயிரை பயன்படுத்தி சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்வது எப்படி...?
தயிர் ஒரு ஆரோக்கியமான உணவு பொருள், மிகவும் குளிர்ச்சி தன்மையுடையது. அதுமட்டும் இல்லாமல் தயிர் பலவகையான சரும பிரச்சனைகளை சரி செய்வதற்கு ஒரு இயற்கை பொருளாக விளங்குகிறது. 
சருமத்தில் அதிக அளவு பருக்கள் ஏற்பட்டால் தயிரில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்றாக கலந்து சருமத்தில் ஏற்பட்டுள்ள பருக்கள் மீது தடவி 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினால் சருமத்தில் உள்ள பருக்கள் மறைந்துவிடும். அதேபோல் பருவினால் ஏற்பட்டுள்ள தழும்புகளும் மறைந்துவிடும்.
 
சிலருக்கு சருமம் பொலிவிழந்து, சருமம் மிகவும் கருமையாக காணப்படும். இதற்கு ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை கலந்து சருமத்தில் ஒரு பேக்காக போடவும், பின்பு 20  நிமிடங்கள் வரை காத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவவும். இவ்வாறு செய்வதினால் சருமத்தில் ஏற்பட்டுள்ள கருமை நிறம் மறைந்து, சருமம் பொலிவுடன் காணப்படும்.
webdunia
ஒரு ஸ்பூன் அரைத்த புதினா பேஸ்ட், ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, இந்த கலவையை  சருமத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடங்கள் வைத்து குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவவும். இவ்வாறு செய்வதினால் சருமத்தை  பொலிவுடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளலாம்.
 
ஒரு துண்டு வெள்ளரிக்காய், இரண்டு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் ஓட்ஸ் அல்லது கடலை மாவு ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து ஒரு  முறை அரைத்து போட்டு வருவதால், சருமத்தில் ஏற்படும் கருமை திட்டுக்கள், கரும்புள்ளிகள், சருமத்தில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும்  ஆயில் சருமம் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு உடல் உஷ்ணத்தை குறைப்பது எப்படி...?