Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாதங்களை மிருதுவாக வைத்துக்கொள்ள உதவும் அழகு குறிப்புகள் !!

பாதங்களை மிருதுவாக வைத்துக்கொள்ள உதவும் அழகு குறிப்புகள் !!
, திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (11:10 IST)
கால்களுக்கு அதிக வேலை கொடுப்பதாலும் அதை சீராக பராமரிக்காததாலும் அங்குள்ள தோல் பாகம் வறண்டு தடித்து வெடித்து விடுகின்றன. இதைத்தடுக்க நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சரிசெய்யலாம்.


தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு பாதங்களை ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை வைத்த பிறகு பிரஷ்சினாலே சுத்தம் செய்யவும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம்.

பிறகு பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய டவலால் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம். வெடிப்பு பாதம் உள்ளவர்கள் வீட்டில் உள்ள மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும். பாதவிரல்கள் பழுதடைந்து விட்டால் எலுமிச்சை பழச்சாறு தடவி வரலாம்.

கல் உப்பு, இடித்த மிளகு இலை இரண்டையும் சிறு மூட்டைகளாகக்கட்டி சூடாக்க வேண்டும். பாதத்தில் எங்கு வலி இருக்கிறதோ அங்கு வைத்து எடுக்க வேண்டும். இதன்படி செய்து வந்தால் கால்வலி நீங்கும்.

பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக 5 நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும். கால் விரல்களில் நகச்சுத்தி வந்தால் இதை சரியாக்க எலுமிச்சைப்பழத்துடன் மஞ்சள் தேய்த்து பத்துப்போட்டு வந்தால் நகச்சுத்தி நீங்கும்.

கால் விரல் நகத்தின் ஓரத்தில் மண் குவிந்து விட்டால் நல்லெண்ணெய்யை ஒரு விளக்கில் ஏற்றி வைத்து ஒரு தீக்குச்சியை அந்த நல்லெண்ணெய்யில் வைத்து அந்த விளக்கின் திரியில் சூடு செய்து அந்த விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். 2 அல்லது 3 முறை செய்தபின் அதில் உள்ள அழுக்கு எல்லாம் வந்து விடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைத்து பகுதிகளும் அற்புத மருத்துவகுணம் கொண்ட முருங்கை !!