Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கண்களை பராமரிக்க என்னென்ன செய்ய வேண்டும்?

eye
, புதன், 9 நவம்பர் 2022 (19:19 IST)
கண்கள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத ஒரு உறுப்பு என்பதால் அதை பாதுகாப்பதில் பெரும் கவனம் செலுத்த வேண்டும்
 
கண்களில் உருவாகும் சில பிரச்சினைகளை நாம் கவனிக்காமல் விட்டால் தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் வரும் என்பதும் கண்களுக்கு முறையான ஆலோசனையை மருத்துவரிடம் மட்டுமே தொடர்பு கொண்டு செயல்படுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இரவில் நீண்ட நேரம் கண் விழித்து இருக்க கூடாது என்பதும் செல்போன் டிவி ஆகியவை நீண்ட நேரம் பார்த்துவிட்டு தூங்குவதால் கண்கள் மிகவும் பிரச்சனைக்கு உள்ளாகிறது.
 
கண்களை நன்றாக பராமரிக்க நல்ல தூக்கம், ஆரோக்கியமான உணவு, போதுமான ஓய்வு ஆகியவைகளை கடைபிடிக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. கண்களில் தூசி விழுந்தால் குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவ வேண்டும் 
 
கண்களில் ஏதாவது எண்ணெய் உள்பட பொருள் பட்டுவிட்டால் உடனே சுய மருத்துவ முறையை செய்யாமல் தகுந்த மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் 
 
தொலைக்காட்சி செல்போன் ஆகியவற்றை நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் மட்டுமே பார்க்க வேண்டும். கும்மிருட்டில் தொலைக்காட்சி செல்போனை பார்க்க கூடாது 
 
கண்களை அவ்வப்போது சிமிட்டுவது கண்களில் ஈரப்பதம் உண்டாகி கண்கள் நீண்ட நாள் பாதுகாப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒருநாளில் 811 பாதிப்புகள்; 02 பலி! – முடிவுக்கு வரும் கொரோனா!