Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்க்கரை நோயாளிகள் பிஸ்தா சாப்பிட்டால் பிரச்சனை ஏற்படுமா?

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (17:15 IST)
சர்க்கரை நோயாளிகள் பிஸ்தா சாப்பிட்டால் பிரச்சனை ஏற்படுமா?
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பாதாம், பிஸ்தா ஆகியவற்றை சாப்பிட்டால் பிரச்சினை வரும் என்று வதந்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் அதில் உண்மை இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
கொழுப்பு சத்து புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள பாதாம், பிஸ்தாவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதால் எந்த ஒரு பிரச்சனையும் வராது என்றும் குறிப்பாக ரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமல் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
பிஸ்தாவில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால் பசி உணர்வைக் கட்டுபடுத்தி நீண்ட நேரம் சோர்வின்றி உணர வைக்கும் தன்மை அதற்கு உள்ளது என்றும் அதனால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக பிஸ்தா சாப்பிடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
ஆனால் அதே நேரத்தில் உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் பிஸ்தாவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். 50 கிராம் வரை தினமும் பிஸ்தாவை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் என்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக பிஸ்தாவை எடுத்துக்கொள்ளலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாதது என்ன?

ABC ஜூஸின் முக்கிய நன்மைகள். தினமும் அருந்துவதால் கிடைக்கும் முக்கியப் பயன்கள்

கூந்தல் பராமரிப்பு: நெல்லிக்காய் - முடி பலத்திற்கும் அடர்த்திக்கும்!

தினசரி ஓட்டம்: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான அற்புத மருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments