Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தியானம் செய்வதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !!

தியானம் செய்வதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !!
, வியாழன், 7 ஏப்ரல் 2022 (12:33 IST)
யோகா, தியானம் போன்ற அமைதியான எந்த செயலும் மன அழுத்தத்தை வெளியேற்றுகின்றன. 

 
மன அழுத்தம் குறைந்தாலே தூக்கம், மன அமைதி, கோபம், தனிமை போன்ற பிரச்சனைகள் தீர்ந்து விடுகிறது.
 
தியானம் கற்கும் ஆற்றலையும், ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. தியானம் செய்வதால் படிப்பு,வேலை என்று எந்த நிலையிலும் நம் கவனம் சிதறாது.
 
உடல் வலி, தலைவலி போன்ற உடல் ரீதியான பிரச்சனைகள் நீங்குகிறது. தினமும் தியானம் செய்வதால் மனப் பதட்டம், பயம், மனச் சோர்வு, திடீர் மன அழுத்தம் போன்றவை குணமாகும். அதேபோல் இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு போன்ற பிரச்சனைகளும் வராது.
 
ஹார்மோனை சரியான விகிதத்தில் சுரக்கச் செய்து உடலுக்கு மிகவும் நன்மை தருகிறது. தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் தியானம் செய்தலே போதும். உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும்.
 
தினமும் தியானம் செய்வதால் மூளை சுறுசுறுப்பாகும். மூளையில் ஆரோக்கியமும் மேம்படும். தியானத்தின் போது மூளையும் மனதும் ஒருநிலைப்படுவதால் சுயக் கட்டுப்பாடு அதிகரிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜீரண பிரச்சினைகளை போக்கி நலம் தரும் பன்னீர் திராட்சை !!