இன்றைய காலக்கட்டத்தில் அதிகமானோருக்கு பொதுவான பிரச்சனை ஒன்றே அது தூக்கம் குறைவு. சிலர் தூக்கம் வராமல் தவிப்பார்கள்; சிலர் இரவு பலமுறை விழிப்பார்கள்; மற்றவர்கள், எவ்வளவு தூங்கினாலும் ஓய்வாகவே இல்லை எனக் கூறுவார்கள். ஆழமான, நிம்மதியான தூக்கம் கிடைப்பதா என்பது அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது.
அத்தகைய தூக்கத்துக்குத் தேவையானது சில இயற்கை பழங்கள். இவை ஹார்மோன்கள் சுரப்பை தூண்டுவதுடன், நரம்பு அமைப்பையும் சீர்படுத்தும்.
1. புளிப்பு செர்ரி – இதில் மெலடோனின் அதிகம் உள்ளதால் தூக்கத்தின் தரத்தை உயர்த்துகிறது. செர்ரி சாறு குடிப்பதும் பயனளிக்கலாம்.
2. கிவி – இரவு தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன் இரண்டு கிவி பழங்களை சாப்பிடுவது நன்றாகச் செயல்படும். இதில் செரோடோனின் உள்ளதால் தூக்கத்திற்கு உதவுகிறது.
3. அன்னாசி – மெலடோனின் சுரப்பை தூண்டி, தூங்கும் நேரத்தை விரைவுபடுத்துகிறது.
4. வாழைப்பழம் – பொட்டாசியம், மக்னீசியம், ட்ரிப்டோபன் ஆகியவை உள்ளதால் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு தூக்கம் வந்துவிடும்.
5. ஆப்பிள் – மெலடோனின் மற்றும் மெக்னீசியம் உள்ளதால் நரம்புகளை சீர்செய்யும். சிலருக்கு இது தூக்கத்திற்கு உதவலாம்.
இவை மட்டும் போதாது. தூங்கும் முன் மனதை அமைதியாக்கவும், கனமான உணவு, காபி, மது தவிர்க்கவும் வேண்டும். எதுவும் பயனளிக்கவில்லை என்றால் மருத்துவரை அணுகுங்கள்.