Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீணான காத்திருப்பு; தள்ளிப்போகும் நோக்கியா 9.3 ப்யூர் வியூ அறிமுகம்!

Webdunia
திங்கள், 6 ஏப்ரல் 2020 (16:04 IST)
நோக்கியா 9.3 ப்யூர் வியூ வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் ஜிஎஸ்டி வரி உயர்வு அமலுக்கு வந்தது. அதன்படி, ஸ்மார்ட்போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12%  இருந்து 18% உயர்ந்துள்ளது. எனவே, விவோ, ஒப்போ, ஐபோன் வரிசையில் நோக்கியாவும் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை அதிகரித்துள்ளது. 
 
அதன்படி, நோக்கியா 2.3 விலை ரூ. 7,585, நோக்கியா 110 விலை ரூ. 1,684, நோக்கியா 6.2 ரூ. 13,168,  நோக்கியா 7.2 ரூ.16,330 நோக்கியா 105 ரூ. 1,053, நோக்கியா 2.2 ரூ. 6,320 , நோக்கியா 4.2 ரூ.10,008, நோக்கியா 3.2  ரூ. 8,428 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
நோக்கியா 9 பியூர்வியூ மாடல் ரூ. 2,678 விலை உயர்த்தப்பட்டு ரூ. 52,677 என மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாடலின் புதிய படைப்பாக அறிமுகமாக இருந்த நோக்கியா 9.3 ப்யூர் வியூ வெளியீடு இந்த ஆண்டின் பிற்பகுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால், பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளது, அதோடு ஸ்மார்ட்போன் அறிமுகங்களிஅயும் ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments