சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த இந்தியா

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2017 (19:17 IST)
சர்வதேச மேட்டார் சைக்கிள் சந்தையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 


 

 
இந்தியாவில் மோட்டார் சைக்கிளின் பயன்பாடு அதிகமாகி கொண்டிருக்கிறது. அதன்படி 2016 - 2017 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 1.75 கோடி மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மோட்டர் சைக்கிள் நிறுவனங்கள் போட்டிப்போட்டு கொண்டு புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றனர். 
 
இதனால் சர்வதேச மோட்டார் சைக்கிள் சந்தையில் இந்தியா முன்னிலை பெற காரணமாக உள்ளது என கூறப்படுகிறது. இதன்மூலம் இந்தியா சீனாவை வீழ்த்தி முதலிடம் பெற்றுள்ளது. சந்தையில் சீனாவை சுமார் 9 லட்சம் மோட்டார் சைக்கிள் வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளியுள்ளது.
 
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் வாகனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து பஜாஜ் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களுக்கு ராயல் என்ஃபீல்டு புல்லட் ரக வாகனங்கள் போட்டியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments