Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலக்கை அடையாமலே வெற்றி பெற்ற இந்திய அணி

இலக்கை அடையாமலே வெற்றி பெற்ற இந்திய அணி
, ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2017 (22:33 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் 3வது ஒருநாள் போட்டி கண்டி நகரில் இன்று நடந்தது.



 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 217 ரன்கள் எடுத்தது.
 
218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி முதலில் சிறிது தடுமாறினாலும், பின்னர் ரோஹித் சர்மா-தோனி கூட்டணியில் வெற்றியை நோக்கி நகர்ந்தது.
 
44 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 210 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென இலங்கை ரசிகர்கள் ஆத்திரத்தில்  மைதானத்தில் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டதால் போட்டி தற்காலிக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன்னர் வெளிவந்த தகவலின்படி இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம்!