Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாளில் மீளுமா பிஎஸ்என்எல்? ரூ.1,010 கோடி நிதி நெருக்கடி!!

Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (11:25 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஜூலை மாத சம்பளத்தை கொடுக்க ரூ.850 கோடி நிதி நெருக்கடியில் உள்ளதாம். 
 
பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஜூலை மாத சம்பளத்தை இன்னும் கொடுக்காமல் உள்ளதாம். 
 
இவ்விரு நிறுவனங்களும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையில் தள்ளாடி வருகின்றன. இதனால் தங்களது ஊழியர்களுக்கு மாத சம்பளம் கொடுக்க முடியாமல் திணறி வருகிறது. சுமார் ஒரு லட்சத்து 98 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் தவறி விட்டன.
பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு மாதம்தோறும் சுமார் 750 முதல் 850 கோடி ரூபாய் வரை ஊதியம் வழங்க வேண்டியுள்ளது. அதேபோல் எம்.டி.என்.எல் ஊழியர்களுக்கு மாதம் 160 கோடி ரூபாய் ஊதியம் வழங்கும் நிலையில் உள்ளது. 
 
ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆக மொத்தம் ரூ.1,010 கோடியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இரு நிறுவனங்களும் உள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments