Publish Date: Thu, 22 Feb 2018 (14:19 IST)
Updated Date: Thu, 22 Feb 2018 (15:50 IST)
ஏர்டெல் மற்றும் ஜியோ இரு நிறுவனங்களும் பிரதான போட்டியாக பார்க்கப்படும் தொலைத்தொடர்பு துறையில், இவ்விரு நிறுவனங்களும் போட்டி போட்டு சலுகைகளை வழங்கிவருகின்றன. அந்த வகையில் தர்போது ஏர்டெல் டபுள் டேட்டா ஆஃபர் வழங்கியுள்ளது.
ஏர்டெல் அதன் ஆண்டு திட்டமான ரூ.995 என்கிற திட்டத்தை அறிமுகம் செய்தது அதோடு சத்தமின்றி மேலும் இரண்டு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆம், ரூ.193 மற்றும் ரூ.49 விலையில் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் வழக்கமாக வழங்கப்படும் டேட்டா இரண்டு மடங்காக அதிகரித்து வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இவை வழங்கப்படுகிறது.
இது ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கும் டேட்டா ஆட் ஆன் திட்டத்தை விட வித்யாசமானதாகவும் சிறந்ததாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.